Namvazhvu
குருத்துவத்தை விட்டுவிட்டு பாரதிய ஜனதாவில் சேர்ந்த அருள்பணியாளர் - 21.03.2021
Tuesday, 23 Mar 2021 10:08 am
Namvazhvu

Namvazhvu

குருத்துவத்தை விட்டுவிட்டு பாரதிய ஜனதாவில் சேர்ந்த அருள்பணியாளர்

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ரோட்னி போர்னியோ, குருத்துவத்தைத் தொடர முடியாததற்கான காரணத்தை விளக்கும் ராஜினாமா கடிதத்தை. பேராயர் தாமஸ் டிசௌசா அவர்களிடம் கொடுத்துவிட்டு, மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி சேர்ந்துள்ளார். கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் லொயோலா உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக இருந்த அருள்பணியாளர் போர்னியோ. தாம் பாரதிய ஜனதாவில் சேருவதற்கான காரணத்தைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் மார்ச் மாதம் ஐந்தாம் விலகல் கடிதத்தை திருஅவை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இவ்வமயம் இவர் மேற்கொண்ட நடவடிக்கை திருஅவைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.