‘வழிவந்தவர்’ அல்லது ‘வாரிசு’ என்ற புத்தகத்தைச் சாவியர் மார்ட்டினஸ் புரோகல் என்பவர் இஸ்பானிய மொழியில் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தை பெனடிக்ட் குறித்து வழங்கிய நேர்காணல் இடம் பெற்றுள்ளது.
“திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் எனக்கு ஒரு தந்தை போன்று செயல்பட்டவர். அவர் எனக்கு ஆதரவாக இருந்தாரேயொழிய, ஒரு நாளும் நிர்வாகத்தில் தலையிட்டதில்லை. தேவையான நேரங்களில், நான் வழங்கிய விளக்கங்களை அவர் ஏற்றுக்கொண்டார். நான் கடைசியாகத் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களை 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி அவரின் படுக்கையறையில் சந்தித்தபோது, அவரால் பேசமுடியவில்லை எனினும், அவர் என் கையைப் பிடித்து என்னை அடையாளம் கண்டுகொண்டதை உணர முடிந்தது. திருத்தந்தைக்குரிய அவரது பணியின் தொடர்ச்சியாக என் பணி இருக்கிறது” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.