No icon

ஆகஸ்ட்  01   

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி இத்தாலியில் 1696 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27 ஆம் நாள் பிறந்தார். திருப்பலியில் பங்கேற்று பக்தியிலும், நம்பிக்கையிலும், ஏழ்மையிலும், நற்பண்பிலும் வளர்ந்தார். 16 ஆம் வயதில் சட்டம் பயின்று, வழக்குரைஞராக 8 ஆண்டுகள் பணி செய்தார். உலக இன்பங்களையும், பதவிகளையும் புகழையும் துறந்து 1726 இல் குருவானார். இயேசுவின் நாமம் எல்லா இதயத்திலும் ஆட்சி செய்ய ஆர்வமுடன் உழைத்தார். இறைவார்த்தையை வாழ்ந்து காட்டிய லிகோரி கல்லூரியில் பணியாற்றினார். 1732 இல்இரட்சகர் சபையைநிறுவி நகரத்திலும், குடிசைகளிலும், சாக்கடை ஓரங்களிலும் அல்லலுறும் மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டினார். 1762 ஆம் ஆண்டு, புனித ஆகத்தா கோத்ஸ் மறைமாவட்ட ஆயரானார். மறையுரை சிறப்பாக நிகழ்த்த குருக்களை பயிற்றுவித்தார். நற்கருணையையும், அன்னை மரியாவையும் அதிகம் அன்பு செய்த புனித லிகோரி 1787 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 1 ஆம் நாள் இறந்தார்.

Comment