No icon

மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் 

தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்துவ ஒன்றிப்புப் பணிக்குழுவின் பரிந்துரை

அன்புக்குரிய அருட்தந்தையரே, அருட்சகோதரிகளே, இறைமக்களே!

     இயேசுவின் நாமத்தில் வாழ்த்தினை உரித்தாக்கிக் கொள்கிறேன்!

     உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கெதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நோய் இன்னும் அதிகமாக பரவாமல் இருக்கவும், இறைவேண்டல் மற்றும் பிறரன்பு பணிகளில் ஈடுபட்டுகொண்டிருக்கின்றோம். இவ்வேளையில் இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து ஜெபிக்க மீண்டும் ஒரு அழைப்பு. இந்திய நாட்டிற்கான கிறிஸ்துவ ஐக்கிய இறைவேண்டல் ((United Christian Prayer for India - UCPI) என்ற அமைப்பும், தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்துவ ஒன்றிப்புப் பணிக் குழுவும் இணைந்து மே 31 ஆம் தேதி நிகழ்கின்ற பெந்தகோஸ்தே பெருவிழாவினை 'இந்திய நாட்டிற்கான ஐக்கிய இறைவேண்டல் நாளாக" கொண்டாட அழைக்கின்றது.

    தமிழகம் முழுவதும் இருக்கும் எல்லா சபையை சேர்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இணைந்து எல்லா ஆலயங்களிலிருந்தும், ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் இந்திய நாட்டிற்காக பரிந்துரைத்து செபிக்க அழைக்கப்படுகிறார்கள்.

https://www.namvazhvu.in/magazine/magazine/993/May----INTER-CHURCHES-PRAYER--https://www.namvazhvu.in/magazine/magazine/993/May----INTER-CHURCHES-PRAYER--

     இவை பற்றிய செய்தியினை தங்கள் பங்கு இறைமக்களுக்கு அன்பியம் நற்செய்திப் பணிக்குழு பிற அமைப்புகளைப் பயன்படுத்தி, அறிவிப்புக்கொடுத்து, இல்லங்களிலிருந்தவாறே செபிப்பதற்கு வழிகாட்டுவோம்.

     பங்குதந்தையர், தம் ஆலயத்தில் ஒரு சிலரோடு மட்டும் சமூக விலகலைக் கடைபிடித்து நடத்தலாம்.

     விரும்புவோர், தேசிய கொடியினையும் வசதியான இடத்தில் ஏற்றிவைத்து, நாட்டிற்காக செபிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தலாம்.

     அனைவரும் இணைந்து தொற்றுநோய் நீங்குவதற்காக தொடர்ந்து செபிப்போம்.

     'நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள் " (யோவான் 14:19) என்று அழைக்கும் இறைவன் நம் அனைவரையும் நலமுடன் வாழ வைப்hர்.

     உங்கள் அனைவரின் முயற்சிகளையும் உங்களையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!

     இயேசுவில் அன்புள்ள,

                                     மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் 

                                     தருமபுரி மறைமாவட்டம்

மற்றும் தலைவர்-  தமிழக ஆயர் பேரவையின் கிறிஸ்துவ ஒன்றிப்புப் பணிக்குழு.

Comment