No icon

உரோமை திருப்பயண அறிவிப்பு

மறைசாட்சி தேவசகாயம் புனிதர் பட்டத்திற்காக

அன்புடையீர்,

நமது மண்ணின் மறைசாட்சி தேவசகாயம் புனிதர் பட்டத் திருநிகழ்வை நேரில் கண்டு பங்கேற்க விரும்புபவர்களுக்குத் திருப்பயண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கென்றுதிருப்பயணக்குழுஒன்று ஆயரால் ஏற்படுத்தப்பட்ட புனிதர் பட்டத் தயாரிப்புக் குழுவிலிருந்து அமைக்கப்பட்டு பயண முகவர்களைத் தொடர்புகொண்டு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கீழ்வரும் இரண்டு பயணத்திட்டங்களில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து கொள்ளலாம்:

1. உரோம், இத்தாலி: 6 இரவும் 7 பகலும். புறப்பாடும் திரும்பி வந்து சேர்தலும் - சென்னை, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, டில்லி, பெங்களூரு, கொச்சி. புறப்பாடு: மே 13. திரும்பி வந்து சேர்தல்: மே 20. கணிக்கபட்ட தொகை ரூ. 150,000/- (குறைய வாய்ப்புண்டு)

2. உரோம், இத்தாலி லூர்து, பாத்திமா உள்ளடக்கிய ஐரோப்பிய திருப்பயணம். 14 இரவு, 15 நாட்கள். புறப்பாடும் திரும்பி வந்து சேர்தலும் - சென்னை, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, டில்லி, பெங்களூரு, கொச்சி. புறப்பாடு மே 13. திரும்பி வருதல்: கணிக்கபட்ட தொகை ரூ. 250,000/- (குறைய வாய்புண்டு).

பதிவு செய்யும் முறை: பங்குகள் தோறும் அருள்பணியாளர் அல்லது அருள் சகோதரி, அல்லது திருஅவையால் அங்கீகரிக்கப்பட்ட பொதுநிலையினரின் தலைமையில் குழுக்களாக. குழுக்களாகப் பதிவு செய்தால்தான் தொடர்புகொள்வதற்கும் பயணத்திற்கும் எளிதும் இனிதும் ஆகும். தனியாகப் பதிவுசெய்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு குழுவில் சேர்க்கப்படுவார்கள். திருப்பயணக்குழு அலுவலகத்தில் நபருக்கு ரூ.500/- கொடுத்து சனவரி 20-க்குள் பதிவு செய்துகொள்ள வேண்டியது. முன்பணம் ரூ.50,000/- மற்றும் முழுத்தொகையும் பயண முகவர்களிடம் செலுத்தவேண்டும். பயண முகவர்கள் திருப்பயணக் குழுவினரால் குறிப்பிடப்படும்.

கையில் இருக்கவேண்டிய ஆவணங்கள்: கடவுச்சீட்டு, ஆதார் எண், 6 மாத வங்கிக்கணக்கு விபரம், புகைப்படம் முதலியவை (பயண முகவர்கள் இதனை விளக்குவார்கள்.)

ஆர்வமுள்ள அனைவரும் முறைப்படி பதிவுசெய்து பங்கேற்க அழைக்கிறோம். இது ஒரு திருப்பயணம் எனவே தக்க ஆன்மீகத் தயாரிப்புடன் பங்குகொண்டு பயன்பெறப் பணிவுடனும் இறை வேண்டலுடனும் அழைக்கிறோம்.

Comment