No icon

குடந்தை ஞானி

முதல்முறையாக சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘நம் வாழ்வு’

அன்பார்ந்தவர்களே! பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 06 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாகநம் வாழ்வும் அதன் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நூல்களும் இடம்பெற உள்ளன. ஆம். பிபாஸி அமைப்பின் உறுப்பினரான சென்னை சலேசிய அரும்பு வெளியீட்டோடு இணைந்துநம் வாழ்வுவார இதழும் அதன் வெளியீடுகளும் இருபதுக்கு பத்து சதுர அளவில் புத்தகக் கடை அமைத்து கிறிஸ்தவ நூல்கள் அனைத்தும் இடம்பெறுவதற்கு வழிவகை கண்டுள்ளது. ஒரு நீண்டநாள் கனவு இன்று நனவாகிறது.

வேண்டுகோள்! ஆகையால்  கிறிஸ்தவ எழுத்தாளர்கள், கிறிஸ்தவ பதிப்பாளர்கள் அனைவரும் தங்கள் படைப்புகள், நூல்கள் அனைத்தும் இடம்பெற வேண்டுமெனில் உங்கள் படைப்புகளை, 10 முதல் 25 எண்ணிக்கையில் ஒவ்வொரு நூலையும் உடனடியாக நம் வாழ்வு முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அதற்கு முன்பாக கட்டாயம் 8778753947 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். இது ஓர் அரிய வாய்ப்புவாருங்கள்! நற்செய்தி அறிவிப்பிற்கு களம் அமைப்போம்பொதுவெளியில் புத்தகங்களைப் பரப்பி, திக்கெட்டும் இயேசுவின் நறுமணம் பரப்புவோம். இது ஒரு நல் வாய்ப்பு!

வாருங்கள்! புத்தகக் கண்காட்சியில் இடம்பெறும் எம் கடைக்கு வருகை தந்து, அனைத்து கிறிஸ்தவ நூல்களையும் 10 முதல் 20 சதவீத தள்ளுபடியில் வாங்கி, வீட்டிற்கு நூலகம் அமைத்து இந்த எழுத்து ஊடகப் பணியை ஊக்கப்படுத்துங்கள்எம் பொறுப்பாளர்களுடைய எண்கள்8248411795 , 7603850822

Comment