No icon

மாவட்ட அளவிலான

கோ-கோ போட்டிக்கு தகுதிப்பெற்ற கோடம்பாக்கம் புனித பாத்திமா பள்ளி

கோடம்பாக்கம் புனித பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சென்னை மண்டல அளவிலான கோ-கோ போட்டியில் வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கல்வியோடு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இப்பள்ளியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இடையிலான 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு இடையிலான கோ-கோ போட்டி, பள்ளி முதல்வர் அருள்சகோதரி அமலா செபாஸ்டின் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. மிகுந்த உற்சாகத்தோடும் உடற்திறனோடும் உள்ள மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில் கோடம்பாக்கம் புனித பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற அனைத்து போட்டியிலும் சிறப்பான புள்ளிகளைப் பெற்றுமண்டல அளவில் முதல் இடத்தைப் பெற்று, மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். இவர்கள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வெற்றிப்பெற வாழ்த்துகள்!

 

Comment