No icon

ஷில்லாங் உயர் மறைமாவட்ட பேராயர் நியமனம்

ஷில்லாங் உயர் மறைமாவட்ட பேராயர் நியமனம்
இந்தியாவின் ஷில்லாங் உயர் மறைமாவட்ட பேராயராக, ஜோவாய் மறைமாவட்ட ஆயர் விக்டர் லிக்ங்டோ அவர்களை, டிசம்பர் 28 ஆம் தேதி திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்தார்.

ஷில்லாங் பேராயராகப் பணியாற்றிவந்த, சலேசிய சபையின் டோமினிக் ஜாலா அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்ற சாலைவிபத்தில், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி, தன் 68வது வயதில், இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அவ்வுயர் மறைமாவட்டத்தின் பேராயராக ஆயர் விக்டர் லிக்ங்டோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

1956 ஆம் ஆண்டு பிறந்து, ஷில்லாங் மறைமாவட்ட அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட விக்டர் லிக்ங்டோ அவர்கள், நோங்க்ஸ்டோயின் மறைமாவட்டத்தின் ஆயராக 2006 ஆம் ஆண்டு முதல், 2016 ஆம் ஆண்டு வரையிலும், ஜோவாய் மறைமாவட்டத்தின் ஆயராக 2016 முதல் தற்போது வரையும் பணியாற்றியுள்ளார்.

ஷில்லாங் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து, துறவுசபைகளைச் சேர்ந்தவர்களே, ஆயர்களாக நியமிக்கப்பட்டிருக்க, தற்போதுதான் முதன்முறையாக, மறைமாவட்ட அருள்பணியாளர் ஒருவர் அங்கு பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comment