No icon

டிசம்பர் 16

புனித அடிலெய்ட்

புனித அடிலெய்ட் 931 ஆம் ஆண்டு பிறந்தார். 16 ஆம் வயதில் லொதேயரை திருமணம் செய்தார். ஒரு குழந்தைக்கு தாயானபோது, கணவனை இழந்தார். பெரென்கர் அரசர் தன் மகனை திருணம் செய்து கொள்ள அடிலெய்ட்டை வற்புறுத்தினார். திருமணத்திற்கு மறுத்ததால் சிறையில் அடைத்து, துன்புறுத்தினார். 951 ஆம் ஆண்டு, ஜெர்மன் பேரரசர் ஒட்டோ, அடிலெய்ட்டை திருமணம் செய்து, சில நாள்களில் இறந்தார். அடிலெய்ட் முழுப்பொறுப்பேற்று ஆட்சி செய்தபோது, மகனால் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டார். புனித வில்லிஜிஸ் துணையுடன் கிறிஸ்துவை பின்பற்றி, அயலானின் வளர்ச்சிக்காகவும், அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்புற்ற மக்களுக்காகவும் பணி செய்தார். திரு அவையின் பணிகள் மற்றும் ஆலயங்கள், துறவு இல்லங்கள் கட்டினார். குழந்தைகளை அன்பு செய்து, அவர்களது ஆன்மீக காரியத்தில் கவனம் செலுத்தினார். 999 ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் நாள் இறந்தார்.

Comment