No icon

பொதுத்தேர்தல்களுக்கான செபங்கள்

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மறை மாவட்டங்களிலுள்ள 96 பங்குத்தளங்களில் கத்தோலிக்கர்கள், பொதுத் தேர்தல்கள் பாதுகாப் பாகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் இடம்பெறும் செப முயற்சிகளில் கலந்து செபித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களின் போது நடைபெற்ற செபக் கொண்டாட்டங்களின் பயனாக நல்ல முடிவு கிடைத்தது. இதனால் கத்தோலிக்க தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அக்குழு மரச்சிலுவையுடன் ஒவ்வெர்ரு பங்குத்தளமாக சென்று, அங்குள்ள மக்களுடன் இரவு முழுவதும் செபத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த மாநிலத்தில் எல்லா கனிம வளங்களும் நிறைவாகக் காணப்பட்டாலும், 50 விழுக்காட்டிற்கு அதிகமானோர் வறுமைக்கோட்டிற்கு க்கீழே வாழ்கின்றனர். விவிலியம் வாசித்தல், செப மாலை செபித்தல்,
பாடல்கள், விவிலியத் தில் ஒரு தலைப்பு பற்றி
விளக்குதல், திரு நற்கருணை ஆரா தனை, ஆசீர் போன்றவை இவ்வழிபாட் டில் முக்கிய இடம் வகிக்கின்றது.
 

Comment