No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

மலேரியாவை ஒழிக்க தொடர்ந்து போராடுவோம்

பல நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ள மலேரியா நோயை ஒழிக்கவும், அந்நோய் தாக்கியுள்ளவர்களைக் குணமாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தொடர்ந்து நடைபெறுமாறு, ஏப்ரல் 26, ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 25, சனிக்கிழமையன்று, ஐ.நா. நிறுவனம் மலேரியா தடுப்பு உலக நாளைக் கடைப்பிடித்தது என்று கூறிய திருத்தந்தை, இந்த கொரோனா கொள்ளை நோய் காலத்திலும்கூட, மலேரியாவை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

அனைத்து நோயாளிகள், அவர்களுக்குப் பணியாற்றுவோர் மற்றும், ஒவ்வொரு மனிதரும் அடிப்படை நலவாழ்வு வசதியைப் பெறுவதற்கு உறுதிபெற உழைப்பவர்கள்   அனைவருக்கும் மிக நெருக்கமாக தான் இருப்பதாக உரைத்தார் திருத்தந்தை.

Comment