No icon

வத்திக்கான் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

வத்திக்கான் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

கடந்த பல மாதங்களாக மூடிக்கிடந்த வத்திக்கான் அருங்காட்சியகம், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல்  பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்று, இந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் பார்பரா ஜத்தா அவர்கள் வத்திக்கான் செய்தியிடம் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியால், மக்கள் கூடிவரும் இடங்களையும், நிகழ்வுகளையும் இத்தாலிய அரசு தடை செய்ததையடுத்து, வத்திக்கான் அருங்காட்சியகமும் பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை என்று ஜத்தா அவர்கள் எடுத்துரைத்தார்.

தற்போது, இத்தாலிய அரசும், வத்திக்கான் அரசும் இணைந்து, ஒரு சில விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளதையடுத்து, வத்திக்கான் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது என்பதை ஜத்தா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

Comment