No icon

குடந்தை ஞானி

பரோடா ஆயர் காட்ஃப்ரே டி ரொசாரியோ ஓய்வு பெற்றார்

2021, டிசம்பர் 18 ஆம் தேதி முதல் குஜராத்தின் பரோடா மறைமாவட்டத்தின் ஆயராக இருந்து வந்த காட்ஃப்ரே டி ரொசாரியோ, S.J. (75) அவர்களின் ஓய்வுக்கான பரிந்துதல் கடிதத்தை, திருத்தந்தை  பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, பரோடாவின் அடுத்த ஆயர் நியமிக்கப்படும் வரை, பரோடாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகத் காந்திநகர் மேனால் பேராயர் பெர்னாண்டஸ், S.J, அவர்களை நியமித்துள்ளார்.

ஆயர் காட்ஃப்ரே 1946 ஆம் ஆண்டு  செப்டம்பர் 13 ஆம் தேதி  அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்தார். அவர் 22 ஆம் தேதி ஏப்ரல் 1978 இல் இயேசு சபையின் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார். மேலும், அவர் ஆயராக நியமிக்கப்படுவதற்கு முன்பு குஜராத்தின் இயேசு சபை மாநிலத்தலைவராக பணியாற்றினார். தனது 50வது வயதில், 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் பரோடாவின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டார். அருட்பணியாளராக 43 ஆண்டுகளும், ஆயராக 23 ஆண்டுகளும் இறைபணி புரிந்து, தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார்.

Comment