No icon

குடந்தை ஞானி

இஸ்பெயின் நாட்டின் டோலிடோ பெருமறைமாவட்ட முன்னாள் பேராயர் மரணம்

இஸ்பெயின் நாட்டின் டோலிடோ பெருமறைமாவட்ட முன்னாள் பேராயர் மரணம்
ஸ்பெயின் நாட்டில் டோலிடோ பெருமறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்தினால் பிரான்சிஸ்கோ ஆல்வரெஸ் மார்டின்ஸ் அவர்கள், ஜனவரி 5 ஆம் தேதி, புதன்கிழமையன்று இறைபதம் சேர்ந்தார்.  96 வயதான கர்தினால் பிரான்சிஸ்கோ ஆல்வரெஸ் மார்டின்ஸ் அவர்கள், கடந்த சில காலமாக நோயுற்றிருந்த நிலையில் இப்புதன் காலை ஸ்பெயின் நேரம் 6.45 மணிக்கு மத்ரித் நகர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக, டோலிடோ பெருமறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ்கோ செரோ சாவ்ஸ் அறிவித்தார்.
1925 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி பிறந்த கர்தினால் பிரான்சிஸ்கோ ஆல்வரெஸ் மார்டின்ஸ் அவர்கள், 1950 ஆம் ஆண்டு அருள்பணியாளராகவும், 1973 ஆம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 1995 ஆம் ஆண்டு டோலிடோ பெருமறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட இவர், 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் 77 ஆம் வயதில் டோலிடோ பெருமறைமாவட்டப் பேராயர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற கர்தினால் பிரான்சிஸ்கோ ஆல்வரெஸ் மார்டின்ஸ் அவர்கள், ஜனவரி 5 ஆம் தேதி புதனன்று இறைபதம் சேர்ந்தார்.
 

Comment