No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

சியோல் உயர்மறைமாவட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் திருத்தந்தை

’அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவேண்டும்’ என்ற திட்டத்திற்கென தென்கொரியா திருஅவை தொடர்ந்து வழங்கிவரும் நிதியுதவிகளுக்கு, மீண்டும் ஒருமுறை திருத்தந்தை பிரான்சிஸ் தன் நன்றியை வெளியிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென சியோல் உயர்மறைமாவட்டம் தன் விசுவாசிகளிடம் நிதி திரட்டி அனுப்பியதற்கு நன்றி தெரிவித்து, பேராயர் பீட்டர் ஜங் சூன் டெய்க் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் தாராள மனதிற்கு நன்றி கூறுவதாகவும்,  சியோல் மக்களுடன் தன் நெருக்கத்தை வெளியிடுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கோவிட் பெருந்தொற்று தடுப்பூசித் திட்டங்களுக்கென வத்திக்கானுக்கு 14 இலட்சம் டாலர்களை அனுப்பியுள்ள சியோல் உயர்மறைமாவட்டம், கடந்த ஆண்டு இறுதிவரை, இத்திட்டத்திற்கென 34 இலட்சம் டாலர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. வத்திக்கான் வழியாக உதவிகளை ஆற்றுவதோடு, உலகின் பல பகுதிகளில் ஏழ்மையால் வாடும் மக்களுக்கு தென்கொரியாவின் சியோல் உயர்மறைமாவட்டம் நேரிடையாகவும் பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.    
 

Comment