No icon

மருத்துவம் பேசுகின்றது!

​​​​​​​ஆரோக்கியத்துக்கான இரகசியம்

 

‘ஆராதனை செய்யுங்கள், ஆசீர்வதியுங்கள்’ என்ற வார்த்தைகள் எடைக்கு எடை தங்கத்திற்குச் சமானமானவை. ஆராதனையும், ஆசீர்வதிப்பும் செய்யும் போது நீங்கள் மிகவும் உயர்ந்த அலைவரிசையில் இயங்குகிறீர்கள். யூதர்கள் தங்கள் வாழ்வில் ஆரோக்கியம், செல்வம், மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டுவர ஆசீர்வாதத்தை உபயோகித்துள்ளனர் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஆசீர்வாதத்தின் அருமையை உணர்ந்திருந்தனர்.

‘ஆசீர்வாதம்’ என்பதற்கு “தெய்வ அனுக்கிரகத்தை வேண்டிப் பெற்று நலம் மற்றும் செழிப்பை வழங்குவது” என்று அகராதி பொருள் கூறுகிறது. அதனால் ஆசீர்வாதம் அளிப்பதை உங்கள் வாழ்வில் ஓர் அம்சமாக்கிக் கொள்ளுங்கள். எல்லாரையும் ஆசீர்வதியுங்கள், எல்லாவற்றையும் ஆசீர் வதியுங்கள். அதேபோல் பிறரை அல்லது பிறவற்றை ஆராதனை செய்யும் போது நீங்கள் அன்பை அளிக்கிறீர்கள். அந்த உயர்ந்த அலை வரிசையிலிருந்து இயங்கும் போது அது நூறு மடங்காக உங்களுக்குத் திரும்பி வரும்.

ஆராதனையும் ஆசீர்வதிப்பும் எல்லா எதிர்மறைச் செயல்களையும் கரைத்து விடுவதால் உங்கள் எதிரிகளையும் ஆராதனை செய்யுங்கள்; ஆசீர்வதியுங்கள். உங்கள் எதிரியை நீங்கள் சபித்தால் அது திரும்பி வந்து உங்களைத் தாக்கும். அவர்களை ஆராதித்து அவர்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கும்போது எதிர்மறையானவை மறைகின்றன. ஆராதனையின் அன்பும், ஆசீர்வாதத்தின் நேசமும் உங்களிடம் திரும்பி வரும், அப்படிச் செய்யும்போது நீங்கள் ஒரு புதிய அலை வரிசைக்குள் நுழைவீர்கள். சிறப்பானவை உங்களை வந்தடையும். நன்றாக, சுகமாக, மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

(தொடரும்)

Comment