No icon

பிரதமர் விக்டர் ஓர்பன்

சாண்டோர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ்

சாண்டோர் மாளிகையை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஹங்கேரி அரசால் அதிகாரப் பூர்வமாக வரவேற்கப்பட்டார். ஹங்கேரியின் அரசு அதிகாரிகள் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின்னர், திருத்தந்தையுடன் சென்ற குழு அரசுத்தலைவருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். அதன் பின்னர் உள்ளூர் நேரம் 11.30 மணிக்கு நாட்டுத்தலைவர்களை சாண்டோர் மாளிகையின் முதல் தளத்தில் உள்ள ஊதா அறையில் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தார். அப்போது இரு தலைவர்களிடையே பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

ஹங்கேரியின் குடியரசுத்தலைவரான திருமதி. நோவாக் அவர்களையும், ஹங்கேரி உள்ளூர் நேரம் 11.55 மணிக்கு சாண்டோர் மாளிகையின் மரிய தெரசா அறையில் பிரதமர் விக்டர் ஓர்பன் அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தார். அதன் பின்னர் முன்னாள் கார்மேல் துறவு மட அறைக்குச் சென்றார்.

Comment