No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

“நமது சந்ததியினர் ஏராளமான இயற்கை வளங்களை நமக்கு விட்டுச் சென்றிருந்தாலும், நாம் அதனைப் பாதுகாப்பதை அறிந்திருக்கவில்லை. இப்பூமியைக் காக்கும் பாதுகாவலர்களாகவும், அதனை உருவாக்கும் கைவினைஞர்களாகவும் வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.”

- ஏப்ரல் 23, உலகப் பூமி தினத்திற்கான செய்தி

“பாதிக்கப்பட்டவர்கள், காயம்பட்டவர்கள், விளிம்புநிலை மக்கள், வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கான பணியினை ஆற்றுபவர்களின் உடனிருப்பானது நம்பிக்கையின் ஊற்றைப் பலருக்கும் வழங்குவதாக இருக்க வேண்டும்.”

- ஏப்ரல் 22, கிறிஸ்தவப் பள்ளிகளின் பொதுப் பேரவைக்கான செய்தி

“ஆயனாகிய இயேசு நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் அறிந்து வைத்திருக்கின்றார். நம் பெயர் சொல்லி அழைக்கின்றார், நாம் தொலைந்து போகையில் நம்மைத் தேடுகின்றார்.”

- ஏப்ரல் 21, நல்லாயன் ஞாயிறுக்கான செய்தி

“இன்று நாம் எத்தனை பேர் நம்மைத் தகுதியற்றவர்களாகவும், தவறானவர்களாகவும் கருதிக்கொண்டிருக்கிறோம்? ஆனால், இயேசு நமக்காகத் தம் உயிரைத் தந்தார்; இறந்து உயிர்த்தார். நாம் காணாத அழகை நம் ஒவ்வொருவரிடத்தில் கண்டு, நம்மை அன்பு செய்கின்றார்.”

- ஏப்ரல் 21, இறையழைத்தல் ஞாயிறுக்கான செய்தி

“தூக்கத்திலிருந்து விழித்தெழுவோம்; அலட்சிய மனப்பான்மையிலிருந்து வெளிவருவோம். திரு அவையிலும், உலகிலும் நமது பணிக்கான அழைப்பு என்ன என்பதை ஒவ்வொருவரும் கண்டறிய முயல்வோம்.”

- ஏப்ரல் 20,  திருத்தந்தையின் ‘டுவிட்டர்’ குறுஞ்செய்தி

Comment